அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
அயோத்தி:
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெடிக்காத கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் தாக்குதலுக்கு பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பாதீவிரவாதிகள் தான் காரணம் என தெரியவந்தது. இவர்களுக்கு உதவியதாக முகமது நஸீம், ஆசிப் இக்பால் என்ற பரூக் ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீதா ரஸோய் பகுதியின் பின்புறம் நேற்று வெடிக்காத கையெறி குண்டு ஒன்றுகண்டெடுக்கப்பட்டது. கடந்த வாரம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வெடிகுண்டை நிலத்தில் புதைத்து வைத்துஇருந்ததாகவும்,
தற்போது, பெய்த மழையில் குண்டு வெளியே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்களிடம் இந்த கையெறிகுண்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.