1 மாதத்தில் பெங்களூர்-எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால பணி: மாறன்
பெங்களூர்:
பெங்களூரின் மையப் பகுதியில் இருந்து எலெக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் வகையில் கட்டப்படவுள்ள மாபெரும்மேம்பாலத்தின் கட்டுமானப் பணி ஒரு மாதத்துக்குள் தொடங்க இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.
மடிவாளா பகுதியில் சில்க் போர்ட் அருகில் தொடங்கி பெங்களூர்- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையின் மேல் சுமார் 10 கிமீநீளத்துக்கு இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது. இதனால் பெங்களூர்-ஒசூர் சாலை எலெக்ட்ரானிக் சிட்டி வரை இரண்டு அடுக்குகொண்ட சாலையாக மாறவுள்ளது.
இந் நிலையில் பெங்களூரில் தயாநிதி மாறன் கூறுகையில், பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் அனைவரும் அறிந்தது தான்.பெங்களூர்-எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால சாலைப் பணி தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவிடன்ஆலோசனை நடத்தினேன்.
அந்தப் பணி ஒரு மாதத்துக்குள் தொடங்கப் போவதாக பாலு தெரிவித்தார். பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கமாநில அரசுக்கு, மத்திய அரசும் முழு அளவில் துணை நிற்கும் என்றார்.