For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 மாதத்தில் பெங்களூர்-எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால பணி: மாறன்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரின் மையப் பகுதியில் இருந்து எலெக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் வகையில் கட்டப்படவுள்ள மாபெரும்மேம்பாலத்தின் கட்டுமானப் பணி ஒரு மாதத்துக்குள் தொடங்க இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.

பெங்களூரில் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி வருகிறது. இதையடுத்து பெங்களூர்- ஒசூர் சாலையில்சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைந்துள்ள எலெக்ட்ரானிக் சிட்டிக்கு பெங்களூரின் மையப் பகுதியில் இருந்து தனியாக ஒருமேம்பால சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மடிவாளா பகுதியில் சில்க் போர்ட் அருகில் தொடங்கி பெங்களூர்- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையின் மேல் சுமார் 10 கிமீநீளத்துக்கு இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது. இதனால் பெங்களூர்-ஒசூர் சாலை எலெக்ட்ரானிக் சிட்டி வரை இரண்டு அடுக்குகொண்ட சாலையாக மாறவுள்ளது.

இந் நிலையில் பெங்களூரில் தயாநிதி மாறன் கூறுகையில், பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் அனைவரும் அறிந்தது தான்.பெங்களூர்-எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால சாலைப் பணி தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவிடன்ஆலோசனை நடத்தினேன்.

அந்தப் பணி ஒரு மாதத்துக்குள் தொடங்கப் போவதாக பாலு தெரிவித்தார். பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கமாநில அரசுக்கு, மத்திய அரசும் முழு அளவில் துணை நிற்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X