மயக்க பிஸ்கட் கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை வந்த மும்பை ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து 3 பேரிடம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

வட மாநிலங்களிலிருந்து சென்னை வரும் ரயில்களில் மர்ம நபர்கள் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்களை கொடுத்து,பயணிகளை மயங்கச் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது.

அதுபோல, நேற்று அதிகாலை சென்னை வந்த மும்பை மெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 3 பயனிகளிடம் பணம்கொள்ளை அடிக்கப்பட்டது.

மூன்று பேரும் ரயில் பெட்டியில் மயங்கி கிடந்தனர். அவர்களை சென்னை ரயில்வே போலீசார் கொண்டு வந்து அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். மயங்கிக் கிடந்த 3 பேரும் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மூன்று பேரும் மயங்கிய நிலையில் இருப்பதால் அவர்களிடமிருந்து எவ்வளவு பணம், பொருள்கள் கொள்ளை போனது என்பதுதெரியவில்லை.

இதுகுறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+