For Daily Alerts
Just In
மயக்க பிஸ்கட் கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை
சென்னை:
சென்னை வந்த மும்பை ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து 3 பேரிடம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
அதுபோல, நேற்று அதிகாலை சென்னை வந்த மும்பை மெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 3 பயனிகளிடம் பணம்கொள்ளை அடிக்கப்பட்டது.
மூன்று பேரும் ரயில் பெட்டியில் மயங்கி கிடந்தனர். அவர்களை சென்னை ரயில்வே போலீசார் கொண்டு வந்து அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். மயங்கிக் கிடந்த 3 பேரும் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மூன்று பேரும் மயங்கிய நிலையில் இருப்பதால் அவர்களிடமிருந்து எவ்வளவு பணம், பொருள்கள் கொள்ளை போனது என்பதுதெரியவில்லை.
இதுகுறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Saturday, July 16, 2005, 5:30 [IST]