3 அல்-உம்மா தொண்டர்களுக்கு 42 ஆண்டு சிறை!
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரைக் கொலை செய்த வழக்கில் அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த நான்குபேருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் மாணிக்கத்தின் கடையில் வேலை பார்த்து வந்த மீரான் மொய்தீன், அல் உம்மா தலைவர் பாஷாவின்தம்பி மொஹம்மது கான், மைத்துனர் மொஹம்மது, அப்துல் அஜீஸ் உள்ளிட்ட 8 பேரை சிறப்புப் படை போலீஸார் கைதுசெய்தனர். கைதான அனைவரும் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மீது திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில்விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இன்று நீதிபதி தமிழரசன் இந்த வழக்கில்தீர்ப்பு வழங்கினார்.
மீரான் மொய்தீன், மொஹம்மது கான், மொஹம்மது மற்றும் அப்துல் அஜீஸ் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை (தலா 16வருடம்) வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். 3 தண்டனைகளையும் தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனதுதீர்ப்பில் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications