பி.இ. மாணவர் சேர்க்கை: 30ம் தேதி முதல் கவுன்சிலிங்
சென்னை:
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வரும் 30ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இரண்டு இடங்களை சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பிடித்துள்ளனர்.
முதலிடத்தை அண்ணா நகரைச் சேர்ந்த சந்தோஷ் ஜூட் (298.21), இரண்டாவது இடத்தை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாஸ்பிரசாத் (297.88), மூன்றாவது இடத்தை கோவையைச் சேர்ந்த சிவேஷ் செல்வகுமார் (297.19) ஆகியோர் பெற்றுள்ளனர்.
2வது இடம் பிடித்துள்ள சீனிவாஸ் பிரசாத், நுழைவுத் தேர்விலும் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றைச் சாளர (சிங்கிள் வின்டோ) அடிப்படையில் சீட்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. மொத்தம் 227 கல்லூரிகளில் 37,675இடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. முக்கிய கவுன்சிலிங் 30ம் தேதி தொடங்குகிறது.
விளையாட்டு வீரர்கள் பிரிவினருக்கான கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்கி 22ம தேதி வரை நடைபெறுகிறது. உடல்ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் 27ம் தேதி காலையும், வெளி மாநில மாணவர்களுக்கு அன்று பிற்பகலிலும் கவுன்சிலிங்நடைபெறும்.
பி.ஆர்க்கிடெக்ட் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கவுன்சிலிங் நடைபெறுகிறது.
சென்னை (அண்ணா பல்கலைக்கழகம்), மதுரை (தியாகராஜா பொறியியல் கல்லூரி), கோவை (அரசு தொழில்நுட்பக் கல்லூரி),திருச்சி (தேசிய தொழில்நுட்ப கல்லூரி) ஆகிய ஊர்களில் கவுன்சிலிங் ஒரே நாளில் தொடங்கி நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications