எம்பிபிஎஸ் சேர்க்கை: கவுன்சிலிங் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாலோசனை (கவுன்சிலிங்) இன்று முதல் தொடங்கியது.
முதல் கட்டமாக ஊனமுற்ற மாணவ, மாணவியர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு கவுன்சிலிங் நடந்தது.
உடல் ஊனமுற்ற பிரிவைச் சேர்ந்த 65 மாணவ, மாணவியரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளான 15 மாணவ,மாணவியரும் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்து அனுமதிக் கடிதம் பெற்றனர்.
புதன்கிழமை பொதுப் பிரிவினருக்கும், வியாழக்கிழமை பிற்படுத்தப்பட்டோருக்கும், வெள்ளிக்கிழமை மிகவும்பிற்படுத்தப்பட்டோருக்கும், சனிக்கிழமை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் கவுன்சிலிங்நடக்கிறது.
24ம் தேதி பல் மருத்துவம் மற்றும் தனியார் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர கவுன்சிலிங் நடைபெறும்.












Click it and Unblock the Notifications