கல்லூரிக்குள் புகுந்து 15 பேர் கும்பல் அட்டகாசம்: ரூ. 10 லட்சம் கொள்ளை
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரிக்குள் புகுந்த 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் 7 காவலாளிகளைத்தாக்கி விட்டு ரூ. 10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
கல்லூரியில் பணியில் இருந்த 7 காவலாளிகளையும் இக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாறுமாறாக அடித்துக் கட்டிப்போட்டனர். தடுத்த சில காவலாளிகளுக்கு கத்திக் குத்தும் விழுந்தது. பின்னர் 7 பேரையும் ஒரு அறைக்குள்போட்டு அடைத்தனர்.
அவர்களது வாயில் துணியை வைத்து சப்தம் வராத அளவுக்கு அடைத்தனர்.
அதன் பின்னர் முதல்வர் அறை, காசாளர் அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளின் பூட்டுக்களை உடைத்துத்திறந்து உள்ளே சென்றனர். இதில் காசாளர் அறையில் இருந்த பணப் பெட்டகத்தை உடைக்க முயன்று முடியாதகாரணத்தால் அதை அப்படியே எடுத்துச் சென்றனர்.
மொத்தம் ரூ. 10 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்த துணிகரசம்பவம் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.