For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண்ணாரி டூ நங்கநல்லூர்: பாத யாத்திரையை முடித்தார் விஜயக்குமார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தனது வேண்டுதலை நிறைவேற்ற, தமிழக அதிரடிப்படைத் தலைவர்விஜயக்குமார் பண்ணாரி மாரியம்மன் கோவிலிலிருந்து தொடங்கிய 480 கி.மீ. பாத யாத்திரையாக சென்னைநங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வந்து சேர்ந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தனக் கடத்தல் வீரப்பனை விஜயக்குமார் தலைமையிலான தமிழக சிறப்புஅதிரடிப்படை சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற விஜயக்குமார்அங்கு மொட்டை போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினார்.

இதையடுத்து பண்ணாரி மாரியம்மன் கோவிலிலிருந்து நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாதயாத்திரைசெல்லப் போவதாக அறிவித்தார்.

ஆனால், இதற்கு சில தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே தனது பாதயாத்திரைத் திட்டத்தைத் தள்ளி வைத்தார்.இந் நிலையில், ஜூலை 2ம் தேதி வெளியில் பரபரப்பு ஏற்படாமல், மிக அமைதியாக பண்ணாரி மாரியம்மன்கோவிலிலிருந்து அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

விரதம் இருந்து தினமும் 30 கி.மீ. தூரம் நடந்து 15 நாட்களில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைவந்தடைந்துவிட்டார்.

சுமார் 480 கி.மீ. தூரத்தை விஜயக்குமார் நடந்தே கடந்துள்ளார். ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தவிஜயக்குமார் அங்கு சிறப்பு பூஜைகளை செய்து தனது யாத்திரையை நிறைவு செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X