For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி விமான விபத்து வெறும் வதந்தி!

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்ட தகவல் வெறும் வதந்தி எனத் தெரிய வந்துள்ளது.

திருச்சிக்கும், கரூருக்கும் இடையே உள்ள ஜீயர்புரத்தில் நேற்று காலை ஒரு விமானம் வெகு தாழ்வாக பறந்தது. அதிலிருந்துகரும் புகையும், கீழே விழுவது போல ஆடி ஆடியும் சென்றதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிறிது நேரத்தில் விமானத்தைக்காணவில்லை.

இதையடுத்து விமானம் விபத்தில் சிக்கி கீழே விழுந்து விட்டதாக செய்திகள் பரவின. இந்த விமானத்தில் 2 பேர் இருந்ததாகவும்,அவர்கள் என்ன ஆனார்கள் என்பதிலும் குழப்பம் நிலவியது.

விமானம் விழுந்து விட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி புறநகர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீஸ் படையினரும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஜீயபுரம்என்ற பகுதிக்கு விரைந்தன.

ஆனால், அங்கு விமானம் விழுந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஜீயபுரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள வயல்கள்உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் விமானத்தைத் தேடினர். ஆனால் எங்குமே விமானம் இல்லை.

இதனால் குழப்பமடைந்த போலீஸார் திருச்சி விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர்.

அதற்கு விமான நிலைய அதிகாரிகள், திருச்சி விமான நிலையத்திலிருந்து எந்த பயிற்சி விமானமும் செல்லவில்லை. ஆனால்கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மிக்-32 ரக பயிற்சி விமானம் ஒன்று அந்த நேரத்தில் பயிற்சி மேற்கொண்டதுஎன்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சூலூர் விமானப்படை தளத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மிக்-32 ரக விமானம் பயிற்சிமுடித்து விட்டு காலை 10.17 மணிக்கெல்லாம் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்தே போலீசார் நிம்மதியடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X