விஜயகாந்தால் ஒண்ணும் பண்ண முடியாது: ராஜ கண்ணப்பன்
சென்னை:
எம்ஜிஆர் பெயரை சொல்லி விஜயகாந்த் ஓட்டு வாங்க முடியாது என்று மக்கள் தமிழ் தேசம் நிறுவனத் தலைவர் ராஜகண்ணப்பன் கூறினார்.
மத்திய அரசுடன் பேசி காவிரியில் தண்ணீர் பெற எந்த ஏற்பாடும் செய்யாமல், மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசுபோராட்டம் நடத்துவது அரசியல் நாடகமாகும்.
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசும் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதிகிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதால் எந்தக் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது. ஏற்கனவே கட்சி தொடங்கிய பலநடிகர்கள் அரசியலில் வெற்றி பெறவில்லை. அவர் கட்சி தொடங்கி தனியாக ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுவது நடக்கக்கூடிய காரியமல்ல.
தனிப்பட்ட செல்வாக்கு இருந்தால் மட்டுமே ஓட்டு கிடைக்கும். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி விஜயகாந்தால் ஓட்டு வாங்கமுடியாது. கட்சி தொடங்கி ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து போட்டியிடலாம் அவ்வளவு தான் முடியும்.
எம்ஜிஆருக்குப் பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் யாராலும் அரசியலில் சாதிக்க முடியவில்லை என்றார் ராஜகண்ணப்பன்.












Click it and Unblock the Notifications