சாதாரண உப்புக்கு தடை கூடாது: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
சாதாரண உப்புக்கு தடை விதிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது ஒரு குடிசைத் தொழில் போல நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சாதாரண உப்பின் மொத்த தயாரிப்பில் பெரும்பகுதி சிறு உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களிடமிருந்து தான் மொத்த வியாபாரிகளுக்கு வருகிறது. இவர்கள் வியாபார உத்தியைக் கொண்டு விற்பனைசெய்கின்றனர்.
அயோடின் கலந்த உப்பை மக்கள் மத்தியில் பரவலாக்கும் நோக்கத்தில், அயோடின் கலக்கப்படாத சாதாரண உப்பை மத்தியஅரசு தடை செய்ய தீர்மானித்திருப்பதை அறிந்து சிறு வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது என்பதால் அயோடின் கலந்த உப்பின் தேவையை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.சாதாரண உப்பைத் தவிர்த்து விட்டு அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது படிப்படியாகவும், இயற்கையாகவும் நிகழ்ந்திடவேண்டும்.
அயோடின் உப்பை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பிரசாரத்தையும், விளம்பரத்தையும் அரசு மேற்கொள்ளலாம்.
சாதாரண உப்பு உற்பத்தியை திடீரென தடை செய்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.எனவே சாதாரண உப்பின் மீது விதிக்க உத்தேசித்துள்ள தடையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றுகருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications