மீண்டும் வெடித்த குண்டுகள்: மீண்டும் பீதியில் லண்டன்
லண்டன்:
இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக லண்டனில் நேற்றும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதையடுத்து இங்கிலாந்துபெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
இந்திய நேரப்படி நேற்று மாலையில் வாரன் ஸ்டிரீட் பாதாள ரயில் நிலையம், தெற்கு லண்டனின் ஓவல் ரயில் நிலையம், மேற்குலண்டனின் ஷெப்பர்ட் புஷ் ஆகியவற்றிலும் ஹேக்னி ரேர்ட- கொலம்பியா ரோட் சந்திப்பில் பஸ் எண் 26லும் குண்டுகள்வெடித்தன. நான்கும் ஒரே நேரத்தில் வெடித்தன.
ஆனால், இந்த குண்டுகள் சரியாக வெடிக்காததாலும், சில குண்டுகள் வெடிக்காமலேயே போனதாலும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இருவர் மட்டுமே காயமடைந்தனர்.
ஆனால், இந்த குண்டு வெடிப்புகள் குறித்து செய்தி பரவியதும் லண்டன் செயலிழந்து போய் ஸ்தம்பித்துவிட்டது. கடைகள்,அலுவலகங்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.
மேலும் இரு தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் மருத்துவமனையிலும் ரயில் நிலையத்திலும் புகுந்துள்ளதாக புரளி பரவியதால்லண்டன் நகரம் திமிலோகப்பட்டது.