நீதிபதி பதவி காலியிடம் விரைவில் நிரப்பப்படும்: மத்திய அமைச்சர்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றுமத்திய சட்டத்துறை இணை அமைச்சர் கே.வி.வெங்கடபதி கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் என்னால் ஆன அனைத்தையும் செய்து விட்டேன். இனிமேல் சம்பந்தப்பட்டவர்கள் தான் (மத்திய அரசு)இதுதொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் விரக்தியாக கூறினார்.
இந் நிலையில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வெங்கடபதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், காலியாக உள்ள நீதிபதிபணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டன.
இதுதொடர்பான அனைத்து பூர்வாங்க வேலைகளும் முடிந்து விட்டன. புதிய நீதிபதிகள் குறித்த பரிசீலனைஉச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 42 நீதிபதி பதவிகள் உள்ளன. ஆனால் தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பொறுப்பில் உள்ளனர்.இவர்களில் 8 பேர் இந்த மாதத்தில் ஓய்வு பெறவுள்ளனர். இதனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறைந்து விடும்.
முந்தைய தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தனது பதவிக்காலத்தில் இரண்டு முறை புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பானபட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் அவை பரிசீலிக்கப்படவில்லை.
தற்போதைய தலைமை நீதிபதி கட்ஜுவும் ஒரு பட்டியலை அனுப்பினார். அதற்கும் இன்னும் ஒரு முடிவு வரவில்லை.
நீதிபதிகள் நியமனத்தில் ஜாதி அடிப்படையில் நியமனம் நடைபெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளதமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி ஒன்று காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
தங்களது ஜாதி தமிழகத்தில் பெரும்பான்மையான ஜாதிகளில் ஒன்றாக இருந்தும் ஒரு நீதிபதி கூட தங்களது ஜாதியைச்சேர்ந்தவராக இல்லை.
எனவே புதிய நீதிபதிகளில் சிலர் எங்களது ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அந்தமுக்கியக் கட்சி நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே புதிய நீதிபதிகளை அறிவிப்பதில் மத்திய அரசுகாலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications