மதிமுக, பாமகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் நீட்டிப்பு
டெல்லி:
பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாநிலக் கட்சிகளுக்கான அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சில விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளதால் பல கட்சிகளுக்குநீட்டிப்பு கிடைத்துள்ளது. தற்போதைய விதிமுறைப்படி மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒன்று என்ற வீதத்தில்அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், அம்மாநிலத்தில் பதிவான மொத்த செல்லுபடியாகக்கூடிய வாக்குகளில் 6 சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த பாமக, மதிமுக மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி, கேரள காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தொடர்ந்து மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதாக தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, திரிபுராவில் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.