பாபர் மசூதி: அத்வானி உட்பட 8 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
ரேபரேலி:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அத்வானி உள்பட 8 பேர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் இன்று குற்றசாட்டு பதிவுசெய்யப்பட்டது .
அதை எதிர்த்து உத்திர பிரதேசத்தை சேர்ந்த சிலர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அத்வானியை வழக்கில் சேர்த்து விசாரிக்கஉத்தரவிடப்பட்டது. ரேபேரேலி நீதிமன்றத்தில் ஜூலை 28ம் ததிே ஆஜராகுமாறு அத்வானிக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரேபரேலி நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், அஷோக்சிங்கால், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, ரிதம்பரா ஆகிய 8 பேர் ஆஜரானார்கள்.
இவர்கள் 8 பேர் மீதும் நீதிபதி வி.கே. சிங் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 147,153 (ஏ), 149, 153 (பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டை வாசித்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications