For Quick Alerts
For Daily Alerts
Just In
டெல்லி ரயிலில் குண்டு வெடிப்பு
ஜான்பூர்:
பாட்னாவிலிருந்து டெல்லி சென்ற ரயிலில் இன்று மாலை குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.
பாட்னாவிலிருந்து டெல்லி செல்லும் ஸ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது .
இன்று மாலை 5.15 மணியளவில் ஸ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத சாதாரண கோச்சில் குண்டுவெடித்துள்ளது . இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள்தெரிவிக்கின்றன .
சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர் .
Comments
Story first published: Thursday, July 28, 2005, 5:30 [IST]