விநாயகமூர்த்திக்கு சோனியா நோட்டீஸ்
சென்னை:
தமிழக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து 1 வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு விநாயகமூர்த்திக்கு சோனியா காந்திநோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் டெல்லி சென்று சோனியாவை சந்தித்து வாசன் குறித்து புகார் தெரிவிக்கவும் விநாயகமூர்த்தி திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் விநாயகமூர்த்தி குறித்து சோனியாவிடம் வாசனும், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் புகார் தெரிவித்தனர்.விநாயகமூர்த்தியின் பேச்சு விவரங்களை சேகரித்து அதை சோனியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விநாயகமூர்த்தியிடம் விளக்க கேட்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.விநாயகமூர்த்திக்கு டெல்லியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதாவை பாராட்டி பேசியது, வாசனுக்கு எதிரான விமர்சனம் போன்றவற்றுக்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறுஅந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications