கேரள சட்டசபையில் உரையாற்றினார் கலாம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள சட்டசபையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கேரள மாநில வளர்ச்சிக்கு10 அம்ச திட்டத்தை வலியுறுத்தினார்.
இன்று காலை 9.30 மணியளவில் கேரள சட்டசபைக்கு வந்த அவரை முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் தேரம்பில்ராமகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்றனர்.
பின் அவர், உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கேரள மாநில வளர்ச்சிக்கு 10 அம்ச திட்டத்தை அவர்வலியுறுத்தினார். சுற்றுலாத்துறையில் கேரள அரசு எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
சுமார் 52 நிமிடங்கள் கலாம் சட்டசபையில் உரையாற்றினார். இதன் பிறகு கலாமுடன் உறுப்பினர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின் கோவை சிறையிலுள்ள மதானியை விடுவிக்கக் கோரி கலாமிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனுஅளித்தனர்.












Click it and Unblock the Notifications