கேரள சட்டசபையில் உரையாற்றினார் கலாம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கேரள சட்டசபையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கேரள மாநில வளர்ச்சிக்கு10 அம்ச திட்டத்தை வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். தனி விமானம் மூலம்திருவனந்தபுரம் வந்த கலாமை, விமான நிலையத்தில் ஆளுநர் பாட்டியா, முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அமைச்சர்கள்வரவேற்றனர். பின்னர் அவர் நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் அவர் தங்கினார்.

இன்று காலை 9.30 மணியளவில் கேரள சட்டசபைக்கு வந்த அவரை முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் தேரம்பில்ராமகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்றனர்.

பின் அவர், உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கேரள மாநில வளர்ச்சிக்கு 10 அம்ச திட்டத்தை அவர்வலியுறுத்தினார். சுற்றுலாத்துறையில் கேரள அரசு எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

சுமார் 52 நிமிடங்கள் கலாம் சட்டசபையில் உரையாற்றினார். இதன் பிறகு கலாமுடன் உறுப்பினர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின் கோவை சிறையிலுள்ள மதானியை விடுவிக்கக் கோரி கலாமிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனுஅளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+