மும்பை மழைக்கு 176 பேர் பலி
மும்பை:
மகராஷ்டிர மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழைக்கு இதுவரை 176 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நிவாரணத் தொகையாக மத்திய அரசு ரூ. 83 கோடியை வழங்கியுள்ளது.
இந்த கனமழையால் மும்பை நகரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில், பஸ் மற்றும் விமானப் போக்குவரத்தும்கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை விமான நிலையம் கடந்த 2 நாட்கள் மூடப்பட்டது.
கனமழைக்கு மாநிலம் முழுவதும் 176 பேர் பலியாகி விட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்பலியானவர்களின் எண்ணிக்கை 400க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று மழை குறைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மும்பை நகரம் மெல்ல,மெல்ல இயல்பு வாழக்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
உடனடி நிவாரணத் தொகையாக மகராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு ரூ.83 கோடியை வழங்கியுள்ளது.