For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக அணைகளில் மத்திய குழு ஆய்வு: நாளை மேட்டூர் வருகை

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹோரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளை 3அதிகாரிகள் கொண்ட மத்திய குழு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

காவிரியில் கர்நாடகம் உரிய நீரைத் திறந்து விடக் கோரி சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரைச்சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது மத்திய குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி அணைகளைப் பார்வையிடஏற்பாடு செய்வதாக பிரதமர் உறுதியளித்திருந்தார்.

அதன்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சக திட்ட அதிகாரி பரத்வாஜ், நீர் ஆணைய உறுப்பினர் அகுஜா, வேளாண்துறைஇணை செயலாளர் சம்ஷேர் சிங் ஆகியோர் உட்பட 6 பேர் கொண்ட குழு இன்று கர்நாடகம் வந்தது.

இன்று காலை பெங்களூர் வந்த அவர்கள் கர்நாடக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். பின்னர் கபினி, கிருஷ்ணராஜ சாகர்,ஹோரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளைப் பார்வையிட்டு நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்துஇக்குழுவினர் சனிக்கிழமை மேட்டூர் செல்கிறார்கள்.

இங்கு ஆய்வு செய்த பிறகு திங்கட்கிழமை பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

இதற்கிடையே, கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், அந்த அணையிலிருந்து விநாடிக்கு560 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.

அணைக்கு நீர் வரத்து அபரிமிதமாக உள்ளது. எனவே நீர் திறப்பு இன்னும் சில நாட்களில் கூடுதலாக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X