500 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் தமிழகம் முழுவதும் செல்லலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 500க்கு டிக்கெட் எடுத்தால், தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரு வாரத்திற்கு பயணம் செய்யும் திட்டத்தை தமிழகஅரசு அறிவித்துள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு விரைவுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், நபர் ஒருவருக்கு ரூ. 500 செலுத்தி வருடாந்திர பயணச்சலுகை அட்டையினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம், வருடம் முழுவதும் இப்போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் முன்பதிவு செய்யும்போதுபயணக் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வார காலத்திற்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிப்பதற்காக,நபர் ஒருவருக்கு ரூ. 500 செலுத்தி பயண அட்டையினைப் பெற்று,

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் இந்த அட்டையைக் காட்டி ஒரு வாரத்திற்குள்தமிழகத்திற்குள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம்.

குறிப்பிட்ட ஊர்களுக்கு அடிக்கடி அரசு விரைவுப் போக்குவரத்து மூலம் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வண்ணம், 60நாட்களுக்குள் ஒரு குறிப்பிட்ட ஊருக்கு 5 முறை செல்லும் பயணிகளுக்கு 6வது பயணத்தை இலவசமாக மேற்கொள்ளசலுகை வழங்கப்படுகிறது.

இந்த 6வது முறை பயணம் 60 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதல் கட்டமாக இந்த 6வது இலவசபயணம், சென்னையிலிருந்து திருச்சி, சேலம், நாகை, தஞ்சாவூர், வேளாங்கண்ணி, கும்பகோணம்,பெங்களூர் ஆகியஇடங்களுக்கு மட்டும் அறிகப்படுத்தப்படுகிறது.

சென்னை கோயம்பேடு பஸ் நியைத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு அலுவலகத்தில் இந்த 3சலுகைத் திட்டங்களும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+