இரட்டைக் கொலை: தந்தை, மகளுக்கு 3 ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரியில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வனத்துறை அதிகாரி மற்றும்அவரது வளர்ப்பு மகள் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தர்மபுரி விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். வனத்துறை அதிகாரியாக இருந்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாககடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.அவருக்கு வளர்ப்பு மகள் கமலேஸ்வரியும் உடந்தையாக இருந்தார். பின்னர் இருவரும் போலீஸில் சரணடைந்தனர். போலீஸார்இருவர் மீதும் தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 2 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனைகளை வழங்கி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications