சட்டசபைத் தேர்தலுடன் மக்களவைக்கும் தேர்தல்! ஓ.பி. ஆரூடம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தமிழக சட்டசபைத் தேர்தலுடன் மக்களவைக்கும் தேர்தல் வரும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தின்பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய தலைமையின் கீழும், திட்டமிட்ட நடவடிக்கைகளின் பலனாகவும் இன்று நிதிநெருக்கடி விலகி, தமிழகம் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.

நிதி நிலை மேம்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினருக்கும் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறார்.ஆனால் இதை தேர்தல் கால அறிவிப்புகள் என எதிர்க்கட்சியினர் பொறுப்பின்றி கிண்டலடிக்கிறார்கள்.

தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரும்போது மக்களவைக்கும் தேர்தல் வரும் வாய்ப்புண்டு. சட்டசபைத் தேர்தலில் அதிமுகமீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக கோட்டையில் ஆட்சி அமைப்பார்.

மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவுக்குத்துணையாக நிற்க வேண்டும் என்றார் பன்னீர் செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+