மனைவி, 2 மகள்களை எரித்துக் கொன்று மதபோதகர் தற்கொலை முயற்சி!
விருதுநகர்:
மதுரை அருகே காரியாபட்டியில் கடன் தொல்லை காரணமாக கிறிஸ்தவ மத போதகர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைஎரித்துக் கொன்றார். பின்னர் தானும் தீவைத்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மத போதகர் விருதுநகர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.காரியாபட்டி அருகே கல்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஏசு கணேசன். இவருக்கு தேவிகா என்ற மனைவியும், கலைச் செல்வி,சித்ரா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்த ஏசு கணேசன் நிறைய கடன்கள்வாங்கியிருந்தார். அத்தோடு மனைவி தேவிகாவுக்கும் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த ஏசு கணேசன், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து நேற்றுஇரவுமனைவி மற்றும் மகள்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றார். பின்னர் அவரும் தீக்குளித்தார்.
தீயின் வெப்பம் தாங்க முடியாமல் வீட்டிற்கு வெளியே வந்து விழுந்து துடித்த ஏசு கணேசனையும், தீயில் எரிந்து போனதேவிகா மற்றும் இரு பெண் குழந்தைகளையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்தனர்.
அங்கு தேவிகாவும், அவரது இரண்டு மகள்களும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஏசு கணேசன் உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications