காவிரி: மத்திய குழுவின் பரிந்துரை இல்லாத அறிக்கை தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவுப்படி கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகளைப் பார்வையிட்ட மத்திய குழுஎந்தவித பரிந்துரையும் இல்லாமல் ஒரு அறிக்கையை காவிரி கண்காணிப்புக் குழுவிடம் அளித்துள்ளது.

சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க உத்தரவிடவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து மத்திய நிபுணர் குழுவை கர்நாடகத்திற்குஅனுப்பி நீர் இருப்பை ஆய்வு செய்வதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அதன்படி 3 பேர் கொண்ட குழு கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளையும், தமிழகத்தில் மேட்டூர்அணையையும் பார்வையிட்டது. பின்னர் டெல்லி சென்ற இக்குழுவினர் காவிரி கண்காணிப்பு குழுவிடம் ஒரு அறிக்கையைதாக்கல் செய்துள்ளனர்.

அதில் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது போன்ற ஒரு பரிந்துரையும் இல்லை. இரு மாநிலஅணைகளின் நீர் இருப்பு, பயிர் நிலவரம் போன்றவை மட்டுமே அந்த அறிக்கையில் உள்ளதாம்.

மேலும், கர்நாடகத்திலிருந்து அதிக அளவு நீர் மேட்டூர் அணைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், போதிய நீர் இருப்பு இருமாநில அணைகளிலும் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டிய நீரின் பங்கு குறித்து ஒரு வார்த்தைகூட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+