For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரக்கோணம்: ரயிலில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

அரக்கோணம்:

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் அனாதரவாக விடப்பட்டிருந்த பையில் துப்பாக்கி,தோட்டாக்கள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சமீபத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் ரயில் நிலையங்கள் மற்றும்ரயில்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் பெட்டிகளில் போலீஸார் தீவிரசோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந் நிலையில் பீகாரிலிருந்து ஆலப்புழைக்குச் செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை அரக்கோணம் ரயில்நிலையத்தில் வந்து நின்றது. அப்போது, முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில், ஒரு தோல் பை கிடந்ததைப் போலீஸார்பார்த்தனர். உடனடியாக அந்தப் பையைக் கைப்பற்றி சோதனை போட்டனர்.

அப்போது, அப்பையில், கைத் துப்பாகிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கத்திகள் போன்ற ஆயுதங்கள் இருந்ததைப் பார்த்துதிடுக்கிட்டனர். இந்தப் பையை யார் கொண்டு வந்தது, எதற்காக போட்டுச் சென்றார்கள், தீவிரவாதக் கும்பல் இதற்குப்பின்னணியில் இருக்குமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மார்க்கத்தில் வரும் ரயில்களில் தீவிர சோதனைநடத்தப்பட்டு வருகிறது. தண்டவாளங்கள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பைஅதிகப்படுத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X