சிங்கப்பூரில் தயாளு அம்மாள்: சிகிச்சைக்காக சென்றார்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சிங்கப்பூர் சென்றார். உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறஅவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரும் மகள் செல்வியும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம்சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் மகள் தனது கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அங்கு செல்லும் தயாளுஅம்மாள், பின் அங்குள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications