தமிழக ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு: ஜெ. கோரிக்கை
சென்னை:
தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் நட்வர் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நட்வர்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 8 ஆண்டுகளில் தமிழக ஹஜ் கமிட்டிக்கு வந்த அனைத்துவிண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் குலுக்கல் முறையில் யாத்ரீகர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம்ஏற்படவில்லை.நடப்பு ஆண்டில் 3,297 பேரும், 12 குழந்தைகளும் விண்ணப்பித்துள்ளனர். தமிழக ஒதுக்கீடாக இருந்து வந்த 2009 என்றஎண்ணிக்கையை மத்திய ஹஜ் கமிட்டி 3004 ஆக உயர்த்தியுள்ளது. வந்துள்ள விண்ணப்பங்களிலிருந்து 3,004 பேரை மட்டும்குலுக்கல் முறையில் தேர்வு செய்யுமாறும் அது கூறியுள்ளது.
குலுக்கல் முறையில் 3,004 பேரை மட்டும் தேர்வு செய்தால் மற்றவர்கள் ஏமாற்றமடைவர். கடந்த 2000மாவது ஆண்டு 1,890இடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் விண்ணப்பித்த 3,848 பேரும் ஹஜ் யாத்திரை செல்வதற்காக தேர்வுசெய்யப்பட்டனர். இதனால் குலுக்கல் முறை தேவைப்படவில்லை.
நடப்பாண்டில் இந்தியாவுக்கான ஒதுக்கீட்டை சவுதி அரேபிய அரசு அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்திற்கான ஒதுக்கீட்டையும்அதிகரித்து விண்ணப்பித்த அனைத்துப் பயணிகளையும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications