இலங்கை அதிபர் தேர்தல்: 10 நாட்களில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் அடுத்த அதிபர் தேர்தலை நடத்தும் தேதியை அறிவிப்பதை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் அதிபர் சந்திரிகாவிட்டுள்ளதை தொடர்ந்து இன்னும் 10 நாட்களில் புதிய அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

இலங்கையில் அதிபர் சந்திரிகாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. ஆனால் தனது பதவிக்காலம் அடுத்தஆண்டு இறுதி வரை இருப்பதாக அதிபர் சந்திரிகா தெரிவித்து வந்தார்.

ஆனால் வருகிற டிசம்பருக்குள் புதிய அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிவலியுறுத்தியது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் அதிபர் தேர்தலை நடத்த சந்திரிகா ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்ட ஒரு அறிக்கையில், இலங்கை அரசியல் சட்டப்படி புதிய அதிபர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பது குறித்து முடிவுசெய்யுமாறு அதிபரான நான் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளேன்.

எனவே தேர்தல் தேதியை உச்சநீதிமன்றம் இன்னும் 10 நாட்களுக்குள் முடிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிகா, 2 முறை அதிபர் பதவியை வகித்து விட்டதால் இனிமேல் அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆளும்கூட்டணி சார்பில் பிரதமர் மஹிந்திரா ராஜபக்ஷே தேர்தலில் போட்டியிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+