For Daily Alerts
Just In
சென்னை: மர்ம பொருள் வெடித்ததில் சிறுவன் சாவு
சென்னை:
சென்னை போரூர் அருகே பழைய இரும்புக் கடையில் மர்ம பொருள் வெடித்ததில் அந்தக் கடையே தரைமட்டமானது. அதில்வேலை பார்த்த சிறுவன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தான்.
போரூர் காரம்பாக்கம் பகுதியில் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் கடை உள்ளது. இந்தக் கடையில்திங்கள்கிழமை இரவு 5 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது இரவு 8 மணியளவில் கடையில் இருந்த மர்ம பொருள் ஒன்று திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.இதில் கடை முழுவதும் தீ பரவியது.
இந்த வெடி விபத்தில், வெள்ளைத்துரை என்ற சிறுவன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தான். மேலும் 5 பேர் பலத்தகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தால் அந்தப் பகுதியே கரும்புகை சூழந்து காணப்பட்டது.
கடையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
Story first published: Tuesday, August 9, 2005, 5:30 [IST]