For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை: திமுக கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுக அமைச்சர்கள் மீது தேர்தல் ஆணையம்சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர்களாக இருக்கும்பல்வேறு அமைச்சர்கள் 13 லட்சம் போலி வாக்காளர் விண்ணப்பங்களை ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்திடம்கொடுத்தனர்.

இவை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்துஅவற்றில் 90 சதவீதம் போலியானவை என்று கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து போலி விண்ணப்பங்களைக்கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால் இதுவரை அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்குத் தடைகோரிய மாநில அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம்எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் பணிகள் தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X