தளவாய் சுந்தரம் மீதான செக்ஸ் புகார்: விசாரணை தொடங்கியது
சென்னை:
சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது பெண் டாக்டர் கோமதி சுமத்தியுள்ள பாலியல் புகார் தொடர்பானவிசாரணையை நீதிபதி மருதமுத்து தலைமையிலான 3 பேர் கமிட்டி தொடங்கியது.
அமைச்சர் தளவாய் சுந்தரம், தன்னிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதற்குத் தான் உடன்பட மறுத்ததால்இடமாற்றம் செய்ததாகவும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் டாக்டர் கோமதி பரபரப்புகுற்றம் சாட்டினார்.இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதிமருதமுத்து தலைமையிலான 3 பேர்கொண்ட விசாரணைக் கமிட்டியை அமைத்து பெண் டாக்டரின் புகார் தொடர்பாக விசாரிக்கஉத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி மருதமுத்து தலைமையிலான விசாரணைக் கமிட்டியின் முதல் விசாரணை இன்று தொடங்கியது.இதையொட்டி பெண் டாக்டர் கோமதி தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்.
ஆனால் அமைச்சர் தளவாய் சுந்தரம் வரவில்லை, பதிலாக அவரது வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். விசாரணையை வருகிற 18ம்தேதிக்கு ஒத்திவைத்த விசாரணைக் கமிட்டி, அன்றைய தினம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல்செய்ய வேண்டும் என டாக்டர் கோமதிக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications