For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் 15: கரூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

சுதந்திர தினத்தன்று கரூர் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என வந்த கடிதத்தால, ரயில் நிலையத்தில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால் தமிழகம்முழுவதும் ரயில் நிலையங்கள், வரலாற்றுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தர்மபுரி அருகே போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக சிம்னி வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்துதர்மபுரி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நக்சலைட்டுகள் ஊடுறுவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், வீரப்பன் முன்பு நடமாடிய காட்டுப் பகுதிகளான அஞ்செட்டி, தளி,பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படையினர் 3 பிரிவுகளாகப் பிரிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் போலீஸாரும் தீவிரக் கண்காணிப்பில் இரவு பகலாகஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் கரூர் ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு இன்று ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை எழுதியிருந்தவர், தான்ஒரு கூலித் தொழிலாளி என்றும் தினசரி கரூர் ரயில் நிலையம் வழியாக பயணிப்பவர் என்றும், சுதந்திர தினத்தன்று கரூர் ரயில்நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் எனவும் எழுதியிருந்தார்.

இதையடுத்து கரூர் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்தை ஒட்டியுள்ளபகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X