இட ஒதுக்கீடு விவகாரம்: வெடிக்கிறது மாணவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ளதீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது,கல்விக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்குஅனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந் நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நாளை வகுப்புபுறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த அகில இந்திய மாணவர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த மன்றத்தின் மாநிலத் தலைவர் திருமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விரோதமானதாகும்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகள், கல்லூரிகள், குறிப்பாக சட்டக் கல்லூரிகளில் வகுப்புப்புறக்கணிப்பில் மாணவர்கள் ஈடுபடவுள்ளனர் என்றார்.

மேலும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பிலும் நாளை போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் முன்புஇச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+