கலைஞருடன் கவிஞர் கமல் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், தான் எழுதிய கவிதைகளை அவரிடம் படித்துக் காட்டி பாராட்டுபெற்றார்.
பன்முகம் கொண்ட ஒரு சில திரைக் கலைஞர்களில் கமல் முக்கியமானவர். வெறும் நடிப்புடன் நிற்காமல் பல விஷயங்களிலும்நிபுணத்துவம் பெற்ற கமல்ஹாசன் ஒரு கவிஞராகவும் அவதாரம் எடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அவ்வப்போது எழுதி வந்த கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிட முடிவு செய்துள்ள கமல், திடீரென திமுக தலைவர்கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார்.
கருணாநிதியிடம் தான் எழுதியுள்ள கவிதைகள் குறித்துத் தெரிவித்த கமல், பின்னர் அதிலிருந்து ஒரு சில கவிதைகளை படித்துக்காண்பித்தார். கமலின் கவிதைகளைப் பாராட்டிய கருணாநிதி தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தினார்.
கருணாநிதியை சந்தித்த பின் வெளியே வந்த கமல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எழுதிய கவிதைகளை கலைஞரிடம்படித்துக் காண்பித்தேன். கவிதைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம், அவ்வப்போது எழுதுவேன். அப்படி எழுதிய கவிதைகள்நிறைய சேர்ந்து விட்டது. அதை ஒரு தொகுப்பாக வெளியிடப் போகிறேன்.
இக் கவிதைகளை கலைஞரிடம் படித்துக் காட்ட ஆசைப்பட்டேன். உடனே வருமாறு அழைப்பு விடுத்தார் கலைஞர். வந்துவாசித்துக் காண்பித்தேன், கேட்டுப் பாராட்டினார் என்றார்.
கமலின் கவிதைத் தொகுப்பை விரைவில் கருணாநிதியே வெளியிடுவார் என்பு தெரிகிறது.












Click it and Unblock the Notifications