For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்றி, இறக்கி, ஏற்றி: தேசிய கொடியை களங்கப்படுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

திண்டிவனம்:

சுதந்திர தினத்தன்று பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு அதை உடனே இறக்கிய தலைமை ஆசிரியர், விஷயம் வெளியில்தெரிந்ததால் மீண்டும் அதை ஏற்றினார். இவ்வாறு கொடியுடன் விளையாடிய அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சூரிய உதயத்திற்குப் பின் ஏற்றப்படும் தேடியக் கொடியை சூரியன் அஸ்தமானமாகும்போது தான் இறக்க வேண்டும். இதுமரபாகும். இடையில் அதை இறக்குவது சட்டப்படி குற்றம்.

திண்டிவனத்தையடுத்து ஒலக்கூர் கிராம துவக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தன்று கொடியை ஏற்றினார் தலைமை ஆசிரியர்கிருஷ்ணன். மாணவர்கள் அணிவகுப்பு முடிந்ததும், மிட்டாய் கொடுத்த கையோடு காலை 10 மணிக்கே கொடியை இறக்கிவிட்டுவீட்டுக்குப் போய்விட்டார்.

இதையறிந்த பத்திரிக்கையாளர்கள் கொடி இறக்கப்பட்ட கம்பத்தை படம் பிடித்தனர். இந்தத் தகவல் தலைமை ஆசிரியர்கிருஷ்ணனுக்கு எட்டியது. இதையடுத்து பகல் 2 மணிக்கு வேக வேகமாக பள்ளிக்கு வந்த கிருஷ்ணன் மீண்டும் கொடியை ஏற்றிவைத்தார்.

இந்தத் தகவலை அறிந்த கல்வித்துறைக்கு கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X