பாகிஸ்தான்: முஷாரபை கொல்ல முயன்ற ராணுவ வீரருக்கு தூக்கு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபைக் கொல்ல முயன்ற ராணுவ வீரர் தூக்கில் இடப்பட்டார்.
கடந்த 2003ம் ஆண்டில் ராவல்பிண்டி நகரில் முஷாரப்பின் கார் அணிவகுப்பு சென்ற பாதையில் பயங்கர வெடிகுண்டுகள்வெடித்தன. இதில் மயிரிழையில் முஷாரப் உயிர் தப்பினர். அதே போன்ற தாக்குதல் மீண்டும் நடந்தது.அந்தச் சதிகளில் ராணுவத்தினருக்கும் பங்கிருப்பது உறுதியானது.
இது குறித்து நடந்த ராணுவ நீதிமன்ற விசாரணையில் 35 வயதான அப்துல் சலாம் சித்திக் என்பவருக்கு தூக்கி தண்டனைவிதிக்கப்பட்டது. தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி சித்திக் கொடுத்த கருணை மனுவை முஷாரப் நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து இன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மத்திய சிறையில் சித்திக் தூக்கில் இடப்பட்டுகொல்லப்பட்டார்.
சித்திக்கைப் போலவே இந்த கொலைச் சதியில் ஈடுபட்ட மேலும் பல ராணுவத்தினர் மீதும் நீதிமன்றங்களில் விசாரணை நடந்துவருகிறது.












Click it and Unblock the Notifications