For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் வழக்கு: அமைச்சருக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பித்தார் டாக்டர் கோமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு எதிரான பாலியல் முறைகேடு வழக்கில், முக்கியமானஆவணங்களை நீதிபதி மருதமுத்து குழுவிடம் பெண் டாக்டர் கோமதி இன்று ஒப்படைத்தார்.

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் கோமதி. இவர் தன்னிடம்அமைச்சர் தளவாய் சுந்தரம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் 3 பேர்கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

இக் குழுவின் முதல் விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது அமைச்சர் மீதான புகாருக்கு ஆதரவானஆவணங்களை இன்றைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கோமதிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி இன்று காலை விசாரணைக் குழு முன் ஆஜரான டாக்டர் கோமதி, அனைத்து முக்கிய ஆவணங்களையும்நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

ஆனால், இன்றைய விசாரணைக்கும் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்துவிசாரணையை வருகிற 31ம் தேதிக்கு நீதிபதி மருதமுத்து ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X