மகனை கொலை செய்தாரா?: ஆண்டித் தேவர் வீட்டில் சிபிஐ ரெய்ட்
மதுரை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் ஆண்டித் தேவரின் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தினர்.
மாஜி எம்எல்ஏவான ஆண்டித் தேவருக்கு இரண்டு மனைவிகள். இதில் சொத்துப் பிரச்சனை காரணமாக முதல் மனைவியின்நெருக்குதலால் இரண்டாவது மனைவி இந்திராணியின் மகன் சிவராமனை ஆண்டித் தேவரே கொலை செய்துவிட்டதாக புகார்கூறப்படுகிறது.பி.இ. பட்டதாரியான சிவராமன் 1998ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் திடீரென மாயமானார். இது தொடர்பாக மதுரை திடீர் நகர்காவல் நிலையத்தில் புகார் செய்தார் இந்திராணி. ஆனால், வழக்கைப் பதிவு செய்துவிட்டு போலீஸ் தூங்கப் போய்விட்டது. இதில்எந்த விசாரணையும் நடக்கவில்லை.
இதையடுத்து இந்திராணியின் தம்பியும் சிவராமனின் தாய்மாமாவுமான ராஜேந்திர நரசிம்மன் மீண்டும் போலீசிடம் ஒரு புகார்தந்தார். அதில் சிவராமன் காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை ஆண்டித் தேவர் மீதே சந்தேகம் ஏற்படுவதாகக்கூறியிருந்தார்.
ஆனால் போலீஸ் தரப்பில் இதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தைஅணுகினார் தொடர்ந்தார் ராஜேந்திர நரசிம்மன்.
முதல் மனைவியின் பேச்சைக் கேட்டு சிவராமனை ஆண்டித் தேவரே கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும்,இது குறித்து போலீசார் சரியாக விசாரிக்காததால், இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுமாறும் கோரியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிவராமனை தனது முதல் மனைவியின் உறவினர்களோடு சேர்ந்து ஆண்டித் தேவரே கொன்றிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் மதுரையில் உள்ள ஆண்டித்தேவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்திவருகின்றனர்.