11 கத்தார் நாட்டு நிறுவனங்களில் இந்தியர்கள் வேலைக்கு சேர தடை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்தித் தொழிலாளர்களை கொடுமையாக நடத்தி வரும் கத்தார் நாட்டைச் சேர்ந்த 11 நிறுவனங்களை கருப்புப் பட்டியலில்இந்தியா சேர்த்துள்ளது. மேலும் 35 நிறுவனங்களை கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது.கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்த நிறுவனங்களில் இந்தியர்கள் வேலைக்குச் சேர இந்தியத் தூதரகம் தடைவிதித்துள்ளது. பொறியியல் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு ஆட்களைச்சேர்க்கும் நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
அதே போல இந்தியத் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வரும் மேலும் 35 நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில்இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications