என் மனைவி மீதான புகார் உண்மையல்ல: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வருமான வரித்துறை வழக்குகளில் எனது மனைவி அரசு வக்கீலாக வாதாடுவதாக கூறப்படும் புகாரில் உண்மைஇல்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. ஜோதி பேசுகையில்,
வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில் மத்திய அரசின் சார்பாக, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவிநளினி சிதம்பரம் ஆஜராகிறார். இது அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோதமானது என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை சிதம்பரம் மறுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தப் புகாரில்உண்மை இல்லை. இதுதொடர்பாக எனது மனைவியிடமே கேள்வி கேட்கலாம், அவர் விரிவாகவே பதில்அளிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications