செப். 15ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
193 சட்டசபைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என்றுதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்குட்பட்ட தொகுதிகளைத் தவிரமீதள்ள 193 சட்டசபைத் தொகுதிகளில் சுருக்க வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடந்தது. இதன் பின்னர்பெயர்களை நீக்க, சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டது.அந்த அவகாசம் முடிவடைந்து சரி பார்க்கும் பணி நடந்து வந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி இந்தத் தொகுதிகளுக்கானஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு அதுஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 15ம் தேதி பட்டியல் வெளியிடப்படும்.
ஒரே வாக்காளரின் பெயர் வெவ்வேறு முகவரிகளில் இருக்கிறதா என்பதை சரி பார்க்க நவீன உத்தியைகையாண்டு சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக இறுதி வாக்காளர் பட்டியலைவெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications