பொறியியல் கல்லூரிகளில் செல்போன், கிளாமர் ஆடைகளுக்கு இன்று முதல் தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 227 பொறியியல் கல்லூரிகளில் இன்று முதல்செல்போன்கள் பயன்படுத்தவும், கவர்ச்சியான உடைகளை அணியவும் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் அரைகுறையான, கவர்ச்சியான,கிளர்ச்சியூட்டும் ஆடைகளை அணிவது அதிகரித்து வருகிறது.

மேலும் கேமரா செல்போன்கள் மூலம் பெண்களை தவறாக படமெடுப்பது உள்பட பல்வேறு விபரீதங்கள் நடந்து வருகின்றன.மேலும் வகுப்புகள் நடக்கும்போதே மாணவர்கள் செல்போன்களில் பேசுவதும், எஸ்எம்எஸ்கள் அனுப்பி விளையாடுவதுமாகவகுப்பறைகளின் ஒழுக்கமும் கெட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இனிமேல் பொறியியல்கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்திற்குள் செல்போனை கொண்டு வரக் கூடாது.

மாணவிகள் கிளர்ச்சியூட்டும் வகையிலான டைட் பனியன், ஜீன்ஸ், டீ சர்ட் போன்றவற்றை அணியக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 227 பொறியியல்கல்லூரிகளில் இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+