For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 லட்சம் சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்த காங். தொண்டர்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கட்சியின் மேல் இருக்கும் பற்றுதல் காரணமாக கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டர் ஒருவர் தனது ரு. 50 லட்சம் மதிப்புசொத்துக்ளை கட்சிக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் பல்லடம் வட்டம் முத்து க்கவுண்டன் புதூ ரைச் சேர்ந்தவர் எம். எஸ்.திரு முர்த்தி. முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ்தொண்டராக இருந்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள பற்றின் காரணமாக தனது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று பத்து ருபாய் ஸ்டாப் பேப்பரில் இவர் எழுதிய உயிலில், நான் சிறுவயது முதல் காங்கிரஸில் இருந்து வருகிறேன்.கட்சிக்காக பாடுபட வேண்டி விரும்பி, திருமணம் செய்து கொள்ளவில்லை.

எனது ரு. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை, எனக்குப் பிறகு கட்சிக்குச் சேரும் வகையில் உயில் எழுதி வைக்கிறேன்.

எனது சொத்துகள் அகில இந்திய காங்கிரஸுக்கு சொந்தமானது. அகில இந்தியத் தலைவரின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைஎனது சொத்துகளை நிர்வகிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார் திருமூர்த்தி.

உயில் நகலை ஜி. கே. வாசன், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ். ஆர். பாலசுப்ரமணியம், கோவை வடக்கு, தெற்கு, மாநகரமாவட்ட தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் திருமூர்த்தி.

எந்த கட்சியில் சேர்ந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பலர் நிணைக்கும் இக்காலத்தில் திருமூர்த்தி போன்றவர்களும்இருப்பதால்தான் அரசியல் கட்சிகள் பல இன்றும் உயிர்ப்புடன் இருக்க முடிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X