நாடு முழுவதும் தொலைபேசி எண்கள் மாறுகிறது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எஸ்.டி.டி வசதி அகற்றப்பட்டு, நாடு முழுவதும் தொலைபேசி எண்கள் 10 இலக்க எண்களாக மாற உள்ளதாக மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தகவல் சேவைக்கான புதிய தொலைபேசி மையத்தை தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தகவல் தொழில் நுட்பத்தை சாதாரண மக்களிடம் கொண்டுசெல்வதற்குதொலை தொடர்புத்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் எஸ்.டி.டி.சேவை நீக்கப்பட்டு, தொலைபேசி எண்களும் 10 இலக்க எண்களாக மாற்றப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications