பெட்ரோல் விலை உயர்வு: சுவாமி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கண்டனம்தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, பதவிக்கு வந்தது முதல் இதுவரை5 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதிலிருந்தே இந்த ஆட்சியில், கஜானா காலியாகி விட்டது தெரியவருகிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கையில் கோளாறு என்பதையே இது காட்டுகிறது. தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளைமுதலில் அரசு குறைக்க வேண்டும். இதன் மூலம் வரி விதிப்பும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் தானாககுறையும்.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் அரசிடம் கையிருப்பு இல்லை. இப்படி இருந்தால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு எங்கிருந்து பணத்தை செலவழிக்கப் போகிறது என்று கேட்டுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications