பெட்ரோல் விலை உயர்ந்தால் வருத்தப்படுவேன்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரப் போவதாக வெளியாகும் செய்திகள் வருத்தமும், கவலையும் தருகின்றன என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படவுள்ளதாகபத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. மீண்டும் விலை உயர்ந்தால் அது வருத்தம்தரக் கூடிய செய்தியாகும். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையப் பொறுத்தே இந்த முடிவுகள்எடுக்கப்படுகின்றன.
திமுகவைப் பிளக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகவும், பாஜகவும் கோருவதில் ஆச்சரியப்படுவதற்குஒன்றும் இல்லை. காரணம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரையும் அவர்கள்ராஜினாமா செய்யக் கோருகிறார்கள் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications