பஸ் கட்டணத்தை ஏற்ற மாட்டோம்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுஒரே ஆண்டில் ஐந்தாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் இரக்கமற்ற இந்த அரசின் நிலையால்மக்கள் குண்டு விழுந்தது போல அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மிகக் கொடூரமான ஒரு மத்திய அரசுதான் இப்போது நமக்கு இருக்கிறது. இந்த மக்கள் விரோத அரசின் காலம் கணக்கிடப்படுவதுவெகு தூரத்தில் இல்லை.
மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும், தமிழக அரசு மக்கள் நலனைமட்டுமே கருத்தில் கொண்டு, பஸ் கட்டணத்தை உயர்த்தாது. இந்த அபரிமிதமான விலை உயர்வினால் அதிர்ச்சி அடைந்துஎல்லோரும் விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில் கருணாநிதி போன்றவர்கள் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications