கால் சென்டர்கள், பி.பி.ஓ.நிறுவனங்களுக்கு சலுகைகள்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கால் சென்டர்கள், பி.பி.ஓ. அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

இந்தியத் தொழிலக சம்மேளனம் மற்றும் தமிழக அரசின் சார்பில் சென்னையில் கனெக்ட்-05 என்ற 2 நாள் தகவல் தொழில்நுட்பம் மற்றும்அது சார்ந்த துறைக்கான மாநாடு தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா இதை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அதிமுக அரசின் தகவல் தொழில்நுட்பம் சார் துறைக்கான கொள்கை இன்று என்னால்வெளியிடப்படுகிறது. இத்துறை தற்போது மிகப் பெரும் எழுச்சியுடன் வேக நடை போட்டு வருகிறது. எனவே தகவல் தொழில்நுட்பம்மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்த துறைகளை மேம்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

இதை உணர்ந்தே இத்துறைகளுக்கான கொள்கையை தமிழக அரசு வெளியிடுகிறது. இதன்படி, இத்துறையில் ரூ. 50 கோடி முதல் ரூ. 100கோடி வரையிலான முதலீட்டுடன் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக இருந்தால், அந்த நிறுவனங்கள்கூடுதல் முதலீட்டு மானியம் பெறத் தகுதி படைத்தவர்களாக கருதப்படுவர். அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.

கணித மேதை ஸ்ரீனிவாசன் ராமானுஜம் பிறந்த நாளான டிசம்பர் 22ம் தேதியை தமிழக அரசு இனிமேல் ஆண்டுதோறும் தகவல்தொழில்நுட்ப தினமாக கொண்டாடும் என்று கூறினார் ஜெயலலிதா.

இந்த புதிய கொள்கை 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+