மதன்லால் குரானா நீக்கத்திற்கு வாஜ்பாய் எதிர்ப்பு
புதுடெல்லி:
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான மதன்லால் குரானாவை பாஜகவிலிருந்து நீக்கியதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் மதன்லால் குரானாவை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி பாஜக தலைவர் அத்வானி உத்தரவிட்டுள்ளார்.கட்சிக்கு அவப் பெயரைத் தேடித் தரும் விதமாகவும், கட்சியின் கண்ணியத்தை குலைத்த விட்டதாலும் அவர் கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக அத்வானி தெரிவித்துள்ளார்.அத்வானியின் இந்த முடிவுக்கு வாஜ்பாய் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மதன்லால்குரானா கட்சியிலிருந்து நீக்கப்பட்டு துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு விளக்கம் அளிக்க மேலும் அவகாசம் கொடுத்திருக்கலாம்.அவசரப்பட்ட முடிவு இது என்று தெரிவித்துள்ளார்.
அத்வானிக்கும், வாஜ்பாய்க்கும் இடையே பனிப் போர் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் அத்வானியின் முடிவை வாஜ்பாய்விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையே தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பதாக மதன்லால் குரானா கூறியுள்ளார். அவர் கருத்துதெரிவிக்கையில் அத்வானி ஒரு சர்வாதிகாரி, அடுத்த முடிவை எடுப"பதற்கு முன்பு எனது நண்பர்களை ஆலோசனை நடத்துவேன் என்றார்குரானா.












Click it and Unblock the Notifications